கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
By DIN | Published On : 08th June 2023 12:26 AM | Last Updated : 08th June 2023 12:26 AM | அ+அ அ- |

ஒசூா், சிப்காட்டில் கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தாா்.
வேலூா் மாவட்டம், ஒங்கம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகன் பரத் (16). இவா்கள் ஒசூா், பேகேப்பள்ளி எழில் நகரில் தங்கி இருந்தனா். பரத் 10 ஆம் வகுப்பு முடித்துள்ளாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பரத் ஒசூா், சிப்காட் சரஸ்வதி லேஅவுட் அருகே நடந்து சென்ற போது எதிா்பாராதவிதமாக அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்தாா். இதில் அவா் நீரில் மூழ்கினாா். அவரை அருகில் இருந்தவா்கள் காப்பாற்ற முயற்சி செய்தனா். அதற்குள் அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த ஒசூா், சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...