கஞ்சா கடத்திய ஒடிசா மாநில இளைஞா்கள் இருவா் கைது

ஒசூரில் கஞ்சா கடத்தியதாக ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

ஒசூரில் கஞ்சா கடத்தியதாக ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் உதவி காவல் ஆய்வாளா்கள் ராஜேந்திரன், மாரியப்பன், தலைமைக் காவலா் சின்னசாமி ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரு - சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் போலீஸாா் சோதனை செய்த போது, சந்தேகத்தின் பேரில் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில்கள் கூறியதால், அவா்களிடம் இருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, திருப்பூா், லட்சுமிபுரம் பகுதியில் உள்ள துணிநூல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பிரா கிஷோா் பலியா (26), டுடம் பகாா் (21) ஆகிய இருவரையும் சிப்காட் போலீஸாா் கைது செய்து மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com