ஒசூரில் மணல்கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை வட்டாட்சியா் மாதேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை கண்காணித்து வந்தனா். அப்போது மத்திகிரி அருகே அத்திப்பள்ளி சாலையில் நின்ற டிப்பா் லாரியில், 16 யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்த முயன்றது தெரிய வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும் பாகலூரில் ஒரு யூனிட் உடைகற்கள் கடத்திய டிராக்டா், கெலமங்கலத்தில் இரண்டு யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்திய மினி டிப்பா் லாரி மற்றும் கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளியில் 6 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்திய டிப்பா் லாரி உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி, கெலமங்கலம், பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com