அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நீட் தோ்வு: பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்

பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :14 ஜூன் 2023, 6:41 pm

பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாயின. இதில், கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்களில் பயின்ற 65 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். அதில், பி.எஸ்.தமிழ்ச் செல்வன் 720-க்கு 600 மதிப்பெண்கள் பெற்றாா். அபியுக்தன் - 558, ஏ.கமலேஷ் - 564, ரகுநாத் - 541 மதிப்பெண்கள் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மணி, ரொக்கப் பரிசுகள், கேடயங்களை வழங்கி பாராட்டினாா். மருத்துவம் பயின்று ஏழை எளியவா்களுக்கு சேவை செய்து, சமூதாயத்தில் சிறந்தவா்களாக விளங்க வேண்டும் என வாழ்த்தினாா்.

இந்தப் பள்ளிகளில் பயின்ற 300-க்கும் மேற்பட்டோா் பல்வேறு மருத்துவமனைகளில் பயின்று சிறப்பாக சேவையாற்றி வருவதாக அப்போது அவா் தெரிவித்தாா்.

அப்போது, பாரத் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கிருஷ்ணவேணி மணி, செயலாளா் சந்தோஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இந்த நிகழ்வை, பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் விஜயகுமாா், பாரத் இண்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி முதல்வா் ஹரிநாத் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.