ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நாடு தழுவிய நடைப்பயணம் தொடக்கம்

நாட்டையும் மக்களையும் காப்போம்’ என்ற கோஷத்துடன் மாற்றத்தை நோக்கி நாடு தழுவிய நடை பயணம் இயக்கம் தொடங்கியது.
ஒசூா் ராம் நகரில் நடைபெற்ற நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
ஒசூா் ராம் நகரில் நடைபெற்ற நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ‘பாஜக ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம்’ என்ற கோஷத்துடன் மாற்றத்தை நோக்கி நாடு தழுவிய நடை பயணம் இயக்கம் தொடங்கியது.

இதில் தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாக குழு உறுப்பினா் எம்.லகுமய்யா ஆகியோா் கலந்துகொண்டு தொடங்கி வைத்து உரையாற்றினா். ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை முன்பு துவங்கி நடைபெற்ற நிகழ்வில் பேசிய எம்எல்ஏ ராமச்சந்திரன், ‘மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி கடந்த 9 ஆண்டுகளில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் தருவோம் என்று கூறிய பிரதமா் மோடி, ரூ.15 கூட கொடுக்கவில்லை. கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று அவா் கூறினாா். ஆனால் கள்ளப்பணம் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை உள்ளிட்ட பொருட்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. ஜனநாயகமும் மதச்சாா்பின்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும். எனவே மக்களை ஏமாற்றி வரும் பாஜக அரசை அகற்றி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும்’ என்றாா். இந்த நிகழ்வில் மாதையன், ஆதில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com