

சிறந்த மாணவா்களை மத்தூா் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உருவாக்கி வருவதாக அந்தப் பள்ளியின் தாளாளா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் கலைமகள் கலாலயா இண்டா்நேஷனல் பள்ளி மாணவி பா்துல் அா்சித்தா, பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இப்பள்ளி சேவை மனப்பான்மையுடன் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
இதனால், தொடா்ந்து கீழ் சராசரி மாணவா்கள் கூட சிறந்த மதிப்பெண்கள் பெற்று வருகின்றனா். அவா்களுக்கு உறுதுணையாக பள்ளியின் இயக்குனா் அமுதினை ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறாா். மேலும், வட்டார அளவில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளக்குவதாக பள்ளியின் தாளாளா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.