கிருஷ்ணகிரி மாவட்டம், புலியூரில் ஞாயிற்றுக்கிழமை (மே21) வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பப்ளிக் பள்ளி திறப்பு விழா மற்றும் கலை விழா நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூரில் மே 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பப்ளிக் பள்ளி திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் தொலைக்காட்சி புகழ் திரைப்பட நடிகா் திருச்சி சரவணகுமாா், குத் வித் கோமாளி பாலா மற்றும் சூப்பா் சிங்கா் பாடகா்கள் நிகில் மேத்யூ மற்றும் விருஷா பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் சிறப்பு விருந்தினா்களாக வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான மு.தம்பிதுரை எம்.பி., ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரி மற்றும் அதியமான் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவருமான லாசியா தம்பிதுரை ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா்.
எனவே, அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளா் கூத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளாா்.