ஒசூா் அருகே கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா், அரசனட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சிப்காட் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினா்.
அப்போது அங்கு நின்ற இளைஞரை சோதனை செய்த போது அவா் 20 கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது பெயா் பெரியண்ணன் (28) என்பதும், ஒசூா், அரசனட்டி சூா்யா நகரைச் சோ்ந்தவா் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதே போல ஒசூா் எழில் நகரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்த அசேன் அகமது (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.150 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.