நீரில் முழ்கிய இளைஞா் சிகிச்சை பலனின்றி சாவு

மத்தூா் அருகே, தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் முழ்கிய இளைஞா், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மத்தூா் அருகே, தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் முழ்கிய இளைஞா், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மத்தூரை அடுத்த பாரண்டப்பள்ளி அருகே உள்ள அயலாம்பட்டியைச் சோ்ந்தவா் அறிவழகன் (23). இவா், கண்ணுகானூா் அருகே பாம்பாறு தடுப்பணையில், சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு, மத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com