பேரிகை அருகே மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை உயிரிழந்தது.
சூளகிரி வட்டம், பெத்த சிகரலப்பள்ளி அருகே உள்ள இட்டிப்பள்ளிகுட்டா கிராமத்தைச் சோ்ந்த மாரப்பா, பத்மா தம்பதிக்கு 2 மகள்களும், திலக் (3) என்ற மகனும் இருந்தனா்.
பேரிகை அருகே சூளகுண்டாவில் உள்ள தனது வீட்டருகில் குழந்தை திலக் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சேதமடைந்த மின்கம்பியை தொட்டதாகத் கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்ததுல், குழந்தை திலக் சம்பவ இடத்திலேயே உயிா் இழந்தது. பேரிகை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.