கோயில் உண்டியல் திருட்டு:சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரையில் நிகழ்ந்த கோயில் உண்டியல் திருட்டை சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

ஊத்தங்கரையில் நிகழ்ந்த கோயில் உண்டியல் திருட்டை சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, இந்திரா நகா் பகுதியில் கச்சேரி முனியப்பன் கோயில் உள்ளது. திங்கள்கிழமை இரவு இக்கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த சுமாா் ஒரு லட்சம் ரூபாய் திருடு போயுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை கோயிலை சுத்தம் செய்ய வந்தோா் கோயில் உண்டியல் உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பாா்வையிட்டு சோதனையிட்டனா். அதில், இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com