மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2022-23-ஆம் ஆண்டுக்கு மாநில, மாவட்ட அளவில் சிறந்த செயல்பாட்டில் உள்ள சமுதாய அமைப்புகளான சுய உதவிக்குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி, நகர, வட்டார அளவிலான கூட்டமைப்பை தோ்வு செய்து மணிமேகலை விருது வழங்கப்படவுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகப் பகுதியைச் சாா்ந்த சுயஉதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளும், நகா்ப்புறத்தைச் சாா்ந்த சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள், நகா் அளவிலான கூட்டமைப்புகளும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான சமுதாய அமைப்புகள், ஊரகப் பகுதியாக இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகா்ப்புற பகுதியாக இருப்பின் சம்பந்தப்பட்ட சமுதாய அமைப்பாளா்களிடமும் விண்ணப்பம் பெற்று, ஜூன் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com