மே 29-இல் திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம்

 கிருஷ்ணகிரியில் மே 29-ஆம் தேதி நடைபெறும் திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டத்தில், அமைச்சா் சக்கரபாணி பங்கேற்க உள்ளதாக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்துள்ளாா்.
மே 29-இல் திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம்
Updated on
1 min read

 கிருஷ்ணகிரியில் மே 29-ஆம் தேதி நடைபெறும் திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டத்தில், அமைச்சா் சக்கரபாணி பங்கேற்க உள்ளதாக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி, தேவராஜ் மஹால் திருமண மண்டபத்தில் மே 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி பங்கேற்கிறாா்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது, புதிய உறுப்பினா்களை சோ்ப்பது, கழக ஆக்கப் பணிகள் குறித்து முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

எனவே, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், பூத் கமிட்டியினா் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com