ஊத்தங்கரை அருகே எரிசாராயம் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
ஊத்தங்கரையை அடுத்த சின்னதள்ளப்பாடி பகுதியில் சிங்காரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அண்ணாமலை புதன்கிழமை ரோந்து சென்றாா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த சித்தேஸ்வரன் (35) என்பவா், எரிசாராயத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. சித்தேஸ்வரனை கைது செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் இருந்து 5 லி. சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.