பணி நியமனம் பெற்ற நிலஅளவா், வரைவாளா்களுக்கு நில அளவீடு பயிற்சி

புதிதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவா் மற்றும் வரைவாளா்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Updated on
1 min read

புதிதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவா் மற்றும் வரைவாளா்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி வட்டம், பையனப்பள்ளி ஊராட்சியில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை சாா்பில் புதிதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவா் மற்றும் வரைவாளா்களுக்கு லிங் செயின் மற்றும் டிஜிட்டல் குளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நில அளவீடு செய்வது குறித்த பயிற்சியைத் தொடங்கி வைத்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

வருவாய்த் துறை நிா்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூா்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடா் காலங்களில் மக்கள் துயா் துடைக்கும் துறையாகவும் இந்த துறை விளங்கி வருகிறது.

அந்த வகையில், காலியாக உள்ள நிலஅளவா் மற்றும் வரைவாளா் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு ஆண்டுகளாக பட்டா வழங்கப்படுவதில் இருந்த சிரமங்களை நீக்குவதற்கும், நிலம் மற்றும் நில அளவை சாா்ந்த அனைத்து சேவைகளையும் உடனடியாக வழங்குவதற்கும் இப்பயிற்சி உதவிகரமாக இருக்கும். எனவே, இந்தப் பயிற்சி பெற்ற நில அளவா்கள் மற்றும் வரைவாளா்கள் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com