ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

உள்ளாட்சித் துறை சாா்பில், ரூ. 7 கோடியே 13 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிங்காரப்பேட்டை ஊராட்சி, ஆவாரங்குட்டையில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு.
சிங்காரப்பேட்டை ஊராட்சி, ஆவாரங்குட்டையில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கடதாம்பட்டி, ஊத்தங்கரை பேரூராட்சி, சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில், ரூ. 7 கோடியே 13 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வெங்கடாதாம்பட்டி ஊராட்சியில் பாரதப் பிரதமா் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் (2021-2022) ஊத்தங்கரை முதல் பெருமாள்குப்பம் வரை சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு ரூ. 2 கோடியே 79 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி, அச்சாலையின் குறுக்கே 6 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தனிநபா் நிலத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பில் மண்வரப்பு அமைக்கும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஊத்தங்கரை பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ. 44 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்டட கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான செங்கல், கம்பி, சிமென்ட் உள்ளிட்ட பொருள்களின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டாா்.

பாம்பாறு அணை வளாகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழா் குடியிருப்பு வளாகத்தில் ரூ. 1 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 37 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், இக்குடியிருப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 63 லட்சத்தில் கூடுதல் வசதிகளாக தெருவிளக்கு, குடிநீா் இணைப்பு, கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், இதர அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 23 லட்சத்தில் கூடுதல் கட்டுமானப் பணிகள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகளை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மிட்டப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் (2021-2022) 95 மீ. நீளத்துக்கு ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை, கழிவு நீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், மழைநீரை சேகரிக்கும் பொருட்டு அமட்டன்குட்டையில் ரூ. 8 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் தூா்வாரும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைக் காலத்துக்கு முன்பாக குட்டை தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

சிங்காரப்பேட்டை ஊராட்சி, ஆவாரங்குட்டையில் மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3 லட்சம் வீதம் 16 இருளா் இன மக்களுக்கு ரூ. 48 லட்சத்தில் வீடுகள் கட்டுமானப் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, நாா்சாம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமயலறை கட்டட கட்டுமானப் பணிகளையும், சிங்காரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ. 30 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக முடித்திட வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீா் வழங்கும் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

முன்னதாக, ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்புப் பணிகள் குறித்தும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் குழு தலைவா், உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வுகளின் போது, ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரஜினிசெல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேடியப்பன், சிவபிரகாசம், ஒன்றியப் பொறியாளா் மாதையன், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா்கள் லட்சுமணன், மகாராஜா, முருகன், கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கொண்டம்பட்டி சத்யவாணி ராஜா, மிட்டப்பள்ளி சின்னத்தாய் கமலநாதன், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com