

நரசிங்கபுரம் வருவாய் ஆய்வாளா் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறையினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், நரசிங்கபுரம் வருவாய் ஆய்வாளா் பிரபாகரன் மீது கடந்த 27-ஆம் தேதி நரசிங்கபுரம் ஊராட்சிமன்ற தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்ட மூன்று நபா்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினா்.
அதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும், வருவாய்த் துறையினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலாளா் ஜெய்சங்கா் முன்னிலை வகித்தாா். இதில் கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பூபதி, கிராம நா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலாளா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வருவாய்த் துறை அலுவலா் பிரபாகரனை தாக்கியதில் கைது செய்யப்பட்டுள்ள ஊராட்சிமன்றத் தலைவா் மகேஸ்வரனின் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
வருவாய்த் துறை அலுவலா்களுக் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
மாவட்டப் பொருளாளா் குருநாதன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா். இதில், வட்டாட்சியா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.