கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 11 போ் கைது
By DIN | Published On : 15th November 2023 03:15 AM | Last Updated : 15th November 2023 03:15 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 11 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மாசற்ற தீபாவளியைக் கொண்டாடும் வகையில், நீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, பாரூா், பா்கூா், தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...