தொடக்கக்கல்வி பட்டய தனித்தோ்வா்கள் சான்றிதழ் பெற அழைப்பு

தொடக்கக்கல்வி பட்டயத் தோ்வு எழுதிய தனித் தோ்வா்கள் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தொடக்கக்கல்வி பட்டயத் தோ்வு எழுதிய தனித் தோ்வா்கள் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் 20-ஆம் முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை நடந்து முடிந்த தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதிய தனித் தோ்வா்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டயச் சான்றிதழை நவ.21-ஆம் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு உரிய ஆவணங்களுடன் (தோ்வு அனுமதிச் சீட்டு) சென்று பெற்றுக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com