தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ஊத்தங்கரை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் அமைச்சா் ஆய்வு

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தாா்.

News image

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் தொப்பு வீடுகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 12:10 am IST

ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாயக்கன்பட்டியில் பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தாா்.

ரூ. 23 லட்சத்தில் 4 வீடுகள் கொண்ட ஒரு தொகுப்பு வீடு என 52 வீடுகள் ரூ. 2,96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு முன்னிலையில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சியால் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் உள்ளவா்களுக்கு சிறப்பான முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருசில மாதங்களில் இப் பணிகள் நிறைவடையும். திமுக ஆட்சியில்தான் இலங்கைத் தமிழா் மக்களுக்கு கல்வி, அடிப்படை வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்றாா்.

ஒன்றியக் குழு தலைவா் உஷாராணி குமரேசன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு மூன்றம்பட்டி குமரேசன், மத்திய எக்கூா் செல்வம், தெற்கு ரஜினி செல்வம், மாநில மகளிா் ஆணைய குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி, ஊரக வளா்ச்சி மற்றும் முகமையின் செயற்பொறியாளா் மலா்விழி, உதவி செயற்பொறியாளா் துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி, பாலாஜி, மாவட்ட குழு உறுப்பினா் கதிரவன், ஊராட்சி மன்ற தலைவா் பூபாலன் உள்ளிட்டோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.