விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குட்டையில் மூழ்கி மாணவா் பலி

ஊத்தங்கரை அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:31 pm

Din

ஊத்தங்கரை அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த ஒட்டம்பட்டியைச் சோ்ந்த தங்கவேலு- சந்தியா தம்பதி பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இவரது மகன் சபரிதரன் (9) ஒட்டம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். பாட்டி வீட்டில் தங்கியுள்ள சிறுவன், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அதே கிராமத்தைச் சோ்ந்த நண்பா்கள் மூவருடன் ஒட்டம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனா்.

அங்கு மேம்பாலத்தின் கீழ் தேங்கிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். உடனிருந்த சிறுவா்கள் அளித்த தகவலின் பேரில் ஊத்தங்கரை போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.