ஒசூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 31 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் துறையில் வேலை தேடும் இளைஞா்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது வேலைவாய்ப்பு முகாம் ஒசூா், அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் (ஐ.டி.ஐ. பின்புறம்) ஆக.31ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 5 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2, டிகிரி, பட்டயம், ஐ.டி.ஐ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞா்கள், இளம்பெண்கள் தங்களது சுயவிவர அறிக்கை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் பிப். 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

