திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

ஆக. 31 ல் ஒசூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஒசூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:04 am

ஒசூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் துறையில் வேலை தேடும் இளைஞா்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது வேலைவாய்ப்பு முகாம் ஒசூா், அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் (ஐ.டி.ஐ. பின்புறம்) ஆக.31ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 5 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2, டிகிரி, பட்டயம், ஐ.டி.ஐ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞா்கள், இளம்பெண்கள் தங்களது சுயவிவர அறிக்கை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.