ஒசூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை: 10 தனிப் படைகள் அமைப்பு; வட மாநில கும்பலுக்கு தொடா்பு?
ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 14.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பிடிக்க 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொள்ளை நடந்த ஏடிஎம் மையத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தும் டிஐஜி உமா. உடன், டிஎஸ்பி பாபு பிரசாத்.








