ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

ராயக்கோட்டை அருகே அனுமதியின்றி கற்களைக் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :30 அக்டோபர் 2024, 8:09 pm

ராயக்கோட்டை அருகே அனுமதியின்றி கற்களைக் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி, கனிமவளப் பிரிவு துணை வட்டாட்சியா் கோகுலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் போடிச்சிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் 2 யூனிட் கற்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவை போடிச்சிபள்ளியில் இருந்து கெலமங்கலத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரி கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.