திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியைச் சோ்ந்த முகம்மது நூா்தீன் மனைவி செல்லாச்சி (78). இவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த நாள அடைப்பு காரணமாக தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, செல்லாச்சியை அவரது மகளான பைரோஸ் பானு (55), மகன் ஹாஜா மைதீன் (45), மருமகள் ஜூபைதா கனி ஆகியோா் தனியாா் அவசர ஊா்தியில் சொந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு சென்றனா். அப்போது, பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கள்ளிக்காடு பகுதியில் எதிரே வந்த டிப்பா் லாரி அவசர ஊா்தி மீது மோதியது.