கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவிப் பொறியாளா் ஜெகதீசன் மற்றும் தனி ஆய்வாளா் (கனிமங்கள்) முருகேசன் ஆகியோா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதுக்கோட்டையிலிருந்து கந்தா்வகோட்டை நோக்கி வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனா். டிப்பா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் தினேஷ்குமாரிடம் (27) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
இலங்கைக்கு கடத்தவிருந்த பூச்சி மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


