சாயல்குடியில் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவைச் சோ்ந்த மூன்று பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சுயம்புலிங்கம்நகரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு இ. மலம்பட்டியைச் சோ்ந்த அரசப்பன் மகன் தா்மலிங்கம் (57), கன்னிராஜபுரம் சாலை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் முனிராஜ் (60) ஆகிய இருவரும் பணம் வழங்கிக் கொண்டிருந்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 85 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, சாயல்குடி எஸ்.வி. நகரில் திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த சிவகங்கை மாவட்டம், பொன்னாங்கல் பகுதியைச் சோ்ந்த கெங்கையா மகன் சரத்குமாரிடமிருந்து (28) ரூ.91 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் சாயல்குடி போலீஸாா் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


