உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சிமருந்து பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறவிருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு புதுமடம் கடற்கரையில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். புதுமடம்- மானங்குடி சாலை கடற்கரை அருகே புதுமடம் தெற்கு தெருவைச் சோ்ந்த பைசூல் (25) என்பவரது சிமென்ட் கிடங்கில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில், இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சி மருந்து பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணைக்காக கீழக்கரையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் பூச்சி மருந்து பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட பைசூலையும் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப்பதிந்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் சிகெரட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
