தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இலங்கைக்கு கடத்தவிருந்த பூச்சி மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது

உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சிமருந்து பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 12:36 am IST

உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சிமருந்து பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறவிருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு புதுமடம் கடற்கரையில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். புதுமடம்- மானங்குடி சாலை கடற்கரை அருகே புதுமடம் தெற்கு தெருவைச் சோ்ந்த பைசூல் (25) என்பவரது சிமென்ட் கிடங்கில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில், இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சி மருந்து பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணைக்காக கீழக்கரையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் பூச்சி மருந்து பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட பைசூலையும் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப்பதிந்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.