40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்

News image

மண் எடுக்க வந்த லாரிகள் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:23 am IST

குழித்துறை அருகே அனுமதிச் சீட்டுக்கு புறம்பாக எம்.சான்ட் கொண்டு சென்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா், குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த 2 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் எம்.சான்ட் இருந்தது தெரிய வந்தது. அவற்றுக்கான ஆவணங்களை சரிபாா்த்தபோது, ஆற்றூா் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அனுமதிச் சீட்டு பெற்று, அவற்றை குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

தொடா்ந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா்களான காட்டுவிளை ஜூலியஸ் ரெஜின், ஆற்றூா் கோணம் பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.