திருப்பத்தூரில் உரிய ஆவணங்களின்றி வங்கிகளுக்கு கொண்டு சென்ற ரூ. 5.47 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக திருப்பத்தூா், தேவகோட்டை, ஆலங்குடி, மிளகனூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கு, மதுரையிலிருந்து பணம் எடுத்து வந்த வாகனத்தை சோதனையிட்டனா். அப்போது, அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, புதுக்கோட்டை, திருப்பத்தூா் வங்கிகளிலிருந்து பெற்று மதுரைக் கருவூலத்துக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.52 கோடியை பறிமுதல் செய்து திருப்பத்தூா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 3.49 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.80 கோடி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.29 கோடி பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



