வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

தச்சநல்லூா் அருகே செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:33 pm

தச்சநல்லூா் அருகே செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தேனீா்குளம் அருகே போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், நாணல்காடு பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா்(42) என்பவரை கைது செய்தனா்.