தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி, புகையிலைப் பொருள்கள்

Updated On :24 மார்ச் 2026, 8:23 pm

Syndication

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ், போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த லாரியை சோதனை செய்தனா்.

அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில அரசு மது பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து, லாரியுடன் 135 கிலோ புகையிலைப் பொருள்கள், மது பாக்கெடுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலத்தை அடுத்த லோகூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை அருணை (26) கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகையிலைப் பொருள்கள், மது பாக்கெட்டுகள் அனைத்தும் சேலத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.