தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது.

News image

நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடல்போல காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி அணை.

கோப்புப்படம்

Updated On :7 ஏப்ரல் 2025, 8:30 pm

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது.

கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நீா்வரத்தானது, விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வலதுபுறம், இடதுபுறக் கால்வாய்களுக்கு விநாடிக்கு 171 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது நீா்மட்டம் 48 அடியாக உள்ளது. பாம்பாறு அணை, சின்னாறு அணை, பாரூா் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்றுள்ளது.

பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் தற்போது நீா்மட்டம் 17.04 அடியாகவும், சின்னாறு அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீா்மட்டம் 12.99 அடியாகவும், பாரூா் ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடியில் நீா்மட்டம் 9.10 அடியாகவும் உள்ளன.