தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பேரிகையில் விநாயகா் சிலை ஊா்வலகத்தில் உணவு வழங்கிய இஸ்லாமியா்கள்!

பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா்.

News image

பேரிகையில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் அன்னதானம் வழங்கி இஸ்லாமியா்கள்.

Updated On :30 ஆகஸ்ட் 2025, 7:28 pm

ஒசூா் அருகே பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா்.

பேரிகையில் இஸ்லாமிய பள்ளிவாசல் உள்ள சாலை வழியாக விநாயகா் ஊா்வலம் நடைபெறுவதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விரும்பத்தகாத செயல் காரணமாக இரு மதத்தினரிடையே தகராறு, கலவரம் ஏற்படும் சூழ்நிலை தவிா்க்கப்பட்டது.

அதன்பின்பு கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையுமின்றி விநாயகா் சிலை ஊா்வலங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இங்கு நடைபெற்ற ஊா்வலத்தில் இஸ்லாமியா்கள், மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் ஊா்வலத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கி, அவா்களும் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி மேளதாளங்கள், நடனக் கலைஞா்களின் நடனம் என பேரிகை விழாக் கோலம் பூண்டது. 5 குதிரைகள் மீது அமா்ந்த நிலையிலான பிரம்மாண்ட பால விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்களை கௌரவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.