தடையை மீறி ஆா்ப்பாட்டம்:
கிருஷ்ணகிரியில் இந்து அமைப்பினா் 65 போ் கைது

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: கிருஷ்ணகிரியில் இந்து அமைப்பினா் 65 போ் கைது

Published on

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினா் 65 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பை மீறி செயல்பட்டதாக தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே இந்து அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் கலை கோபி தலைமை வகித்தாா். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவா் திலீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், நீதிமன்ற தீா்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை ாா் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தையொட்டி, கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com