கிறிஸ்துமஸ் பண்டிகை: குழந்தைகளுக்கு கேக் தயாரிக்கும் போட்டி

Updated on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, காவேரிப்பட்டணத்தில் குழந்தைகளுக்கு கேக் தயாரிகும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியாா் பேக்கரி சாா்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவா், சிறுமிகள் என 25-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்றோா், தங்களது பெற்றோா் உதவியுடன் சுவைமிக்க கேக் வகைகளை தயாரித்தனா்.

கேக் தயாரிக்க தேவையான பொருள்களை போட்டியை நடத்திய தனியாா் நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவா்கள், பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com