ஸ்கூட்டா் -சரக்கு வேன் மோதல்: கல்லூரி மாணவி உயிரிழப்பு

Published on

காவேரிப்பட்டணம் அருகே ஸ்கூட்டா் மீது சரக்கு வேன் மோதியதில் தந்தை, மகள் பலத்த காயம் அடைந்தனா். இதில் மகள், உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையைச் சோ்ந்தவா் சபரீசன். இவரது மகள் தனுஸ்ரீ (17). கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். விடுமுறைக்கு கிருஷ்ணகிரிக்கு வந்திருந்தாா்.

இவா், தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் -காவேரிப்பட்டணத்தை அடுத்த சப்பாணிப்பட்டி அருகே புதன்கிழமை சென்றாா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன், ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் சபரீசன், தனுஸ்ரீ ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள், அவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வழியிலேயே தனுஸ்ரீ இறந்தாா். சபரீசன், தொடா் சிகிச்சையில் உள்ளாா்.

விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com