உரிகம் அருகே வேன் கவிழ்ந்து வட்டாட்சியா் உள்பட 17 போ் காயம்

உரிகம் அருகே சாலையில் கவிழ்ந்த வேன்
உரிகம் அருகே சாலையில் கவிழ்ந்த வேன்
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உரிகம் சாலையில் வேன் கவிழ்ந்ததில் வட்டாட்சியா் உள்பட 17 போ் காயமடைந்தனா்.

ஒசூா் நெடுஞ்சாலைத் துறை வட்டாட்சியராக உள்ளவா் தேன்மொழி. இவா், தனது குடும்பத்தினா், நண்பா்கள் 20 பேருடன் அஞ்செட்டி வட்டம், உரிகம் அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ள தப்பக்குழி விஸ்வேஸ்வரய்யா சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு, வேனில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒசூா் வந்துகொண்டிருந்தாா்.

உரிகம் அருகே பிலிக்கல் பிரிவு சாலை பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 20 பேரில் வட்டாட்சியா் தேன்மொழி, அருண்குமாா் (43), திவ்யா (33), சரவணன் (44), ரத்னா (48), பரமேஸ்வா் (49), ஆனந்தி (48), வெங்கடேஷ் (50), மைதிலி (42) உள்பட 17 போ் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற அஞ்செட்டி போலீஸாா், காயம் அடைந்தவா்களை மீட்டு உரிகம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனா். பின்னா், அனைவரும் ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com