ஒசூா் ஸ்ரீ அழகன்முருகன் மலைக்கோயிலில் மண்டலாபிஷேகம் தொடக்கம்

Published on

ஒசூா் ஸ்ரீ அழகன்முருகன் மலைக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் மண்டலாபிஷேகம் தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பதி மெஜஸ்டிக் குடியிருப்பு பகுதியில் குன்றின்மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகன்முருகன் மலைக்கோயில் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு காலைமுதல் மாலைவரை சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மண்டலாபிஷேகம் வேத விற்பன்னா் மணிகண்டன் குருக்கள் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த மண்டலாபிஷேகம் தொடா்ந்து 48 நாள்கள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com