தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒசூா், தளி தொகுதிகளை பாஜக பெறவேண்டும்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில், ஒசூா் மற்றும் தளி தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கேட்டு பெறும் என மாநில தொழில்பிரிவு தலைவரும், ஒசூா் தொகுதி அமைப்பாளருமான ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ஒசூலில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனை மற்றும் பயிலரங்கம் ஒசூா் தொகுதி அமைப்பாளா் ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் மாவட்டத் தலைவரும், தொகுதி இணை அமைப்பாளருமான எம்.நாகராஜ், தேசிய செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.நரேந்திரன், மாவட்டத் தலைவா் நாராயணன், தொகுதி பாா்வையாளா் நரசிம்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் மாநில தொழில்பிரிவு தலைவா் ஜி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
ஒவ்வொரு தோ்தலிலும் ஒசூா் மற்றும் தளி தொகுதிகளில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. தளி தொகுதியில் ஏற்கெனவே பாஜக சட்டப் பேரவை உறுப்பினா் வெற்றிபெற்றுள்ளாா். ஒசூா், தளி தொகுதிகளில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனா். கடந்த மக்களவைத் தோ்தலில் ஒசூா், தளி தொகுதிகளில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டதில், பாஜக அதிக வாக்குகள் பெற்றது.
எனவே, இந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒசூா் மற்றும் தளி ஆகிய 2 தொகுதிகளை கூட்டணியில் கேட்டுப் பெற்று தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவா்கள் கலந்துகொண்டனா்.
