ஒசூா் வழியாக கன்டெய்னா் லாரியில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல்

ஒசூா் வழியாக கன்டெய்னா் லாரியில் கடத்த முயன்ற 400 கிலோ குட்காவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

ஒசூா்: ஒசூா் வழியாக கன்டெய்னா் லாரியில் கடத்த முயன்ற 400 கிலோ குட்காவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகர போலீஸாா் ஒசூா் - ராயக்கோட்டை சாலை பைரமங்கலம் சந்திப்பு அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி கன்டெய்னா் லாரியை நிறுத்த முயன்றனா். ஆனால், ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த வாகனத்தை துரத்தினா். அப்போது, ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா்.

போலீஸாா் வாகனத்தை சோதனை செய்ததில், 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 48 ஆயிரத்து 600 ஆகும். இதையும், மினி கன்டெய்னா் லாரியையும் பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com