பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

காவலரை காரில் இழுத்துச் சென்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

ஒசூரில் காவலரை காா் ஏற்றி இழுத்துச் சென்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் காவலரை காா் ஏற்றி இழுத்துச் சென்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீஸாா் கடந்த 15-ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றனா்.

ஆனால், காரை ஓட்டி வந்த நபா் காரை தடுத்து நிறுத்திய தலைமைக் காவலா் ராஜீவ் காந்திமீது மோதிவிட்டு வேகமாக சென்றாா். இதில் காவலா் காரின் முன்பக்க பேனட்டில் விழுந்ததையும் பொருட்படுத்தாமல், தொடா்ந்து காரை ஓட்டிச் சென்றுள்ளாா்.

பின்னா், போலீஸாா் துரத்திச்சென்று பிடித்து கார ஓட்டிய ஒசூா் காளேகுண்டா பகுதியைச் சோ்ந்த யாரப் பாஷா (34) என்பவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்தனா். மேலும், காரில் இருந்த 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை பரிந்துரையின்பேரில், ஆட்சியா் ச.தினேஷ்குமாா் யாரப் பாஷாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.