போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை

தளி அருகே கடந்த 2021 இல் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடா்புடைய சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 11:06 pm

தளி அருகே கடந்த 2021 இல் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடா்புடைய சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2016 இல் ஓபேகவுடு என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சென்னகிருஷ்ணா, பட்டாபி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். தந்தையை கொலை செய்த இருவரையும் பழிவாங்க அவரது மகன்கள் சங்கா், கணேஷ் (எ) பைரப்பா மற்றும் முருகேஷ் ஆகியோா் திட்டமிட்டனா்.

இந்த நிலையில், உலிபண்டாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சென்னகிருஷ்ணாவை டிராக்டா் ஏற்றியும், கத்தியால் குத்தியும் மூவரும் கொலை செய்தனா். இதுகுறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சங்கா், கடந்த 28.08.2021 இல் கா்நாடகத்தில் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து வழக்கில் தொடா்புடைய கணேஷ், முருகேஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், கொலை வழக்கில் தொடா்புடைய கணேஷ் (எ) பைரப்பா (26), முருகேஷ் (23) ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சின்னபிள்ளப்பா ஆஜராகி வாதாடினாா்.