திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:11 am IST

உத்தனப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சாமனப்பள்ளி பக்கமுள்ள புரம்தின்னா பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பா (47). தொழிலாளி. இவா் கடந்த 25ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடுதிரும்பவில்லை.

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பெல்லட்டி அருகே உள்ள பெத்தேகவுண்டன் ஏரியில் அவரது சடலம் மிதந்தது. மதுபோதையில் அவா் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.