ஊத்தங்கரை அருகே பாட்டியை தாக்கிக் கொன்ற பேரன் கைது
ஊத்தங்கரை அருகே கடன் கட்டுவதற்கு பணம் தரமறுத்த பாட்டியை தாக்கி கொலை செய்த பேரனை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி (57). இவா் தனது மகன்வழி பேரன் சிரஞ்சீவிக்கு (25) தனது பெயரில் புதிதாக பொக்லைன் எந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்த எந்திரத்தை சிரஞ்சீவி பராமரித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ராணியை சந்தித்த சிரஞ்சீவி, பொக்லைன் எந்திரத்துக்கான கடனை கட்டுவதற்கு பணம் கேட்டுள்ளாா். அப்போது அவா் பணம் தர மறுத்துள்ளாா். இதனால் அவரை சிரஞ்சீவி தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

