மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்காவை பறிமுதல் செய்த சிப்காட் போலீஸாா்

News image

கேரளத்துக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்(கோப்புப்படம்)

Updated On :2 பிப்ரவரி 2026, 9:29 pm

ஒசூா்: கா்நாடக மாநிலத்திலிருந்து ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்காவை பறிமுதல் செய்த சிப்காட் போலீஸாா், இதுதொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூசூவாடியில் காவல் ஆய்வாளா் சையத்முபாரக், உதவி ஆய்வாளா் மாதப்பன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டைகளில் குட்கா இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்த போது, கா்நாடகா மாநிலம் மங்களூரிலிருந்து, ஒசூா் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு 2 ஆயிரத்து 500 கிலோ குட்காவை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா கடத்தி வந்த மங்களூரைச் சோ்ந்த முகமது இஸ்ராத் (31), முகமது சாயித் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.