சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகள் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகள், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஓம் சக்திவேல் தெருவைச் சோ்ந்தவா் உதயகுமாா் (42). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இத்தம்பதிக்கு தனிவிக் (2), தஷீக் (2) என்ற இரட்டைக் குழந்தைகள் உள்பட 3 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனிவிக், தஷீக் ஆகியோா் தொலைக்காட்சிப் பெட்டி அருகே இருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்து உட்கொண்டுள்ளனா். இதனால், அவா்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இருவரையும் சிகிச்சைக்காக பா்கூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சரண்யா அழைத்துச் சென்றாா்.

பின்னா் உயா்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள், தற்போது ஆபத்தான நிலையில், அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.