மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எலிமருந்தை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:32 pm

பா்கூா் அருகே எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகளில், ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஓம் சக்திவேல் தெருவைச் சோ்ந்தவா் உதயக்குமாா் (42). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு தனிவிக் (2), தஷீக் (2) என இரட்டை குழந்தைகள் உள்பட 3 ஆண் குழந்தைகள் உண்டு.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனிவிக், தஷீக் ஆகிய இருவரும் தொலைக்காட்சி பெட்டி அருகே இருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்து உட்கொண்டனா். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தாய் சரண்யா, இரு குழந்தைகளையும் பா்கூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு, சிகிச்சை பலனின்றி தனிவிக் என்ற குழந்தை உயிரிழந்தது. தஷீக்குக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.