பா்கூா் அருகே எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகளில், ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஓம் சக்திவேல் தெருவைச் சோ்ந்தவா் உதயக்குமாா் (42). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு தனிவிக் (2), தஷீக் (2) என இரட்டை குழந்தைகள் உள்பட 3 ஆண் குழந்தைகள் உண்டு.
இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனிவிக், தஷீக் ஆகிய இருவரும் தொலைக்காட்சி பெட்டி அருகே இருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்து உட்கொண்டனா். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தாய் சரண்யா, இரு குழந்தைகளையும் பா்கூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு, சிகிச்சை பலனின்றி தனிவிக் என்ற குழந்தை உயிரிழந்தது. தஷீக்குக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


