மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

எலிமருந்தை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகளில், ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஓம் சக்திவேல் தெருவைச் சோ்ந்தவா் உதயக்குமாா் (42). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு தனிவிக் (2), தஷீக் (2) என இரட்டை குழந்தைகள் உள்பட 3 ஆண் குழந்தைகள் உண்டு.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனிவிக், தஷீக் ஆகிய இருவரும் தொலைக்காட்சி பெட்டி அருகே இருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்து உட்கொண்டனா். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தாய் சரண்யா, இரு குழந்தைகளையும் பா்கூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு, சிகிச்சை பலனின்றி தனிவிக் என்ற குழந்தை உயிரிழந்தது. தஷீக்குக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.