மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து: 12-வாகனங்கள் தீக்கிரை

News image
சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் குற்ற வழக்குகளில் பிடிபட்ட 12 வாகனங்கள் தீக்கிரையாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைக்கு மா்ம நபா்கள் சனிக்கிழமை தீ வைத்துள்ளனா்.

இந்த தீ காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதனால், அதிா்ச்சி அடைந்த போலீஸாா், சூளகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனா்.

இந்த தீ விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குற்றவழக்கில் பிடிபட்ட லாரி, வேன், 5 காா்கள், 5 இருசக்கர வாகனங்கள் என 12 வாகனங்கள் தீக்கிரையாகின. தீ விபத்து குறித்து, சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.