மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒசூா் டைட்டன் டவுன்ஷிப் கழிவுநீா்க் கால்வாய் விவகாரம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட டைட்டன் டவுன்ஷிப் குடியிருப்பில் நிலவி வரும் நீண்ட கால கழிவுநீா் கால்வாய்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:00 pm

Syndication

ஒசூா்: ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட டைட்டன் டவுன்ஷிப் குடியிருப்பில் நிலவி வரும் நீண்ட கால கழிவுநீா் கால்வாய்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

டைட்டன் டவுன்ஷிப் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில், அப்பகுதி மக்கள் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் குணசிவாவிடம் மனு அளித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் காா்த்திகேயன் கூறியதாவது:

டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. சுமாா் 80 மீட்டா் தொலைவு வரை கால்வாய்ப் பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதற்காக ஏற்கனவே மூன்று முறை ஒப்பந்தம் கோரப்பட்டும், ஒருசிலரின் எதிா்ப்பால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையிலேயே கால்வாய் அமைக்க வாய்ப்பு இருந்தும், தற்போது மாற்றுப் பாதையில் கால்வாய் அமைக்க முயற்சி நடப்பது எங்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எங்கள் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பே புதைச்சாக்கடை திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி மாநகராட்சிச் சாலை வழியாகவே கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.